மாற்றம் நோக்கி மன்னர் குலம்


 சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!!
 
முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை
 
அவர் காணாத களம் இல்லை
 
நுகராத துறை இல்லை
 
பெறாத பட்டமும் இல்லை
 
அவரைப் போற்றாத புலவர் இல்லை
 
எட்டாத புகழ் இல்லை
 
கிட்டாத வெற்றி இல்லை
 
கொடாத கொடை இல்லை
 
கட்டாத கோவிலில்லை
 
இவர்க்கு நடுங்காத படையில்லை
 
இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை
 
முக்கடல் வற்றுவதுமில்லை
 
முத்தரையர் தோற்பதுமில்லை
 
நம்பினோர் கெட்டதில்லை
 
நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை
 
இவர்களிருந்தால் பல்லவனுக்கு பாதகமில்லை
 
பாண்டியனுக்கு குறையில்லை பலமில்லை
 
சேரனுக்குச் சேனையில்லை
 
தமிழுக்குத் தாழ்வில்லை
 
இவர்களின்றி சோழனுக்குச் சொந்தமில்லை
 
கொடும்பாளூர் கோட்டை இல்லை
 
களப்பிரர் காலமில்லை
 
புத்தனுக்கு மதமில்லை
 
சமணத்துக்குச் சமயமில்லை
 
வைணவத்துக்கு வாழ்வில்லை
 
சைவத்துக்குச் சரித்திரமில்லை
 
ஈசனுக்குக் கண்ணில்லை
 
குடைவரை கோவிலில்லை
 
கொள்ளிடக்கரை இல்லை
 
வைகைக்கு வளமில்லை
 
மஞ்சு விரட்டில்லை
 
மூவேந்தனுக்கு மகனும் இல்லை
 
இவர்களின்றி ஈராயிரமாண்டு தென்னிந்திய வரலாறே இல்லை
 
இன்றுவரை இவர்களால் மாறாத அரசும் இல்லை
 
இருந்தும் இவர்கள் கர்வம் கொண்டதில்லை
 
எவரையும் தாழ்த்தி நடத்தியதும் இல்லை
 
அப்படிப்பட்டவர்க்கு இவர் பிறக்கவும் இல்லை
 
(முத்து)ராஜா என்ற பெயர் எவர்க்கும் இல்லை
 
இவர்க்கு அடங்காத மாந்தரில்லை
 
விரிக்காத வலை இல்லை
 
பார்க்காத பாளையம் இல்லை
 
ஆடாத வேட்டை இல்லை
 
காக்காத காவல் இல்லை
 
சேர்வை எனும் இவர்க்கு நிகரான தலைவனில்லை
 
கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை
 
மூப்பரினும் மூத்தோரில்லை
 
தலையாரியினும் தலைசிறந்தோரில்லை
 
பூசாரியினும் புண்ணியரில்லை
 
நாயகரினும் கொற்றவனில்லை
 
முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை
 
அடக்காத காளை இல்லை
 
இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை
 
இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை
 
பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை
 
எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை
 
இவர்கள் பலம் இவர்களே அறிவதில்லை
 
மற்ற மக்கள் இவர்களிடம் எளிதாய் சண்டைக்கு வருவதில்லை
 
ஏனெனில் இவர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை என்பதை அவர்கள் அறியாமலில்லை
 
முத்தரையர் போல் மக்கள் வளம் யார்க்கும் இல்லை
 
இவர்கள் இல்லாத இடமில்லை
 
ஒன்று சேரப் போவதுமில்லை
 
சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை
 
தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை
 
முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை
 
முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை
 
எல்லோரிடமும் உணர்வும் இல்லை
 
நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை
 
அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை
 
முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை
 
அரசியலில் செல்வாக்கில்லை
 
பொருளாதார பலமில்லை
 
சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை
 
இனத்திற்குள் ஒற்றுமை இல்லை
 
பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை
 
மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை
 
ஊடகத்திலும் வலுவாய் இல்லை
 
முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...
 
 

முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07


 http://www.facebook.com/groups/mutharaiyar/
  •            இரண்டாவது வருடமும் இதோ முடியப் போகிறது,இதுவரை யார் உண்மை குற்றவாளி என்று எமக்குதெரியவில்லைவிசாரணை நடத்தப் படுகிறதா ? என்றும்தெரியவில்லையாருக்காக தன் வாழ் நாள் முழுவதும்உழைத்தாரோ அந்த மக்களும் மறந்துப் போனார்கள்,
  •    யாருக்காக தன் மூச்சு நிற்க்கும் வரை விசுவாசமாகஇருந்தாரோ அவர்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தும்இந்தவழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்றுஅறிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆர்வம் கூடஇல்லை. இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி யோஅல்லது சிபிஐயோ நடத்த வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்தும் அது பற்றிய அக்கறையோஆர்வமோ அரசாங்கத்திற்க்கு இல்லாமல் போய்விட்டது
  •    படுகொலை நடந்த அடுத்த 15 தினங்கள்புதுக்கோட்டைதஞ்சை மாவட்டத்தினை ஸ்தம்பிக்க வைத்த முத்தரையர்கள் பின்னர் ஏனோ இதனைமறந்து போனார்கள்முத்தரையர் இனத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்து இந்த மாபாதகத்தைசெய்த பதருகளேஒன்றை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள்வீழ்வதும்எழுவதும் எமக்கு புதிதல்லஎம்மை நிரந்தரமாக வீழ்த்திவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்..!! யாம் எழும் நாள் தொலைவில் இல்லை இந்த நேரத்திலும் நாம் தமிழக அரசினையும்/ தமிழக முதல்வரையும் வேண்டுகிறோம்
  •    உங்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும்,உங்களால் அமைச்சராக்கியும்மாநில அமப்புச் செயலாளராகவும் அழகு பார்க்கப் பட்டவர்முத்தரையர் இனத்தின் பாதுகாவலனாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டு ஆகின்றது
  •    உங்கள் மேல் இத்தனை மரியாதையையும்பாசத்தையும் வைத்தவர் யாரால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் தானே அறிந்து கொள்ள வேண்டும் ?
  •      உங்களுக்காக தானே உழைத்தார்இனியும் தாமதிக்காமல் இப்பொழுதாவது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்அதுதான் அவரால் உங்களுக்கு ஆதரவாளரார்களாக மாற்றப்பட்ட முத்தரையர்களுக்கு நீங்கள் செய்யும் பிரதிகரமாக இருக்கும்
  •    முத்தரைய பெருமக்களே...!! நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் நம்மை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டே இருக்க போகிறோம்.. நமக்கான அரசியல் என்ன நம் இனத்தவர்களுக்கு ஏன் வாய்ப்புக்கள்மறுக்கப்படுகின்றன ஊருக்கு ஊர் வெட்டிப் பெருமை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசப் போகிறோம் ?ஒருபக்கம் இளைய தலைமுறை குடிப் பழக்கத்திற்க்கு அடிமையாக்கப் படுகிறதுமறு பக்கம்,
  •    நமக்கான அரசியலை ஏற்று நடத்த சரியான தலைமை இல்லை,இன்னும் சொல்லப் போனால் வருகின்ற தலைமைகள் கூட தங்களின் சுய லாபத்திற்காக நம்மை மற்றவர்களிடம் அடகு வைத்துவிடுகிறது,
  •    இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன நாம் தெளிவடைவது எப்போது அக்டோபர் ந் தேதியுடன்ஆண்டுகள் இரண்டு ஆகிறதுநம்முடைய மாவீரன் நம்மை விட்டு சென்று முத்தரையர் இனமே.. !!உனக்காக உழைத்திட்டஉன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் பாதுகாக்க மறந்த மாவீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உங்களை வேண்டுகிறோம்,அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..!!என்பதை நாம் அறியாததல்ல...
மாவீரனே...! உன்னை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. ! உன்னை எங்களிடமிருந்து  பிரித்தவர்களை மன்னிக்கவும் மாட்டோம் என்றும் உன் வழியில் ........