சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.
சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!!
முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை
அவர் காணாத களம் இல்லை
நுகராத துறை இல்லை
பெறாத பட்டமும் இல்லை
அவரைப் போற்றாத புலவர் இல்லை
எட்டாத புகழ் இல்லை
கிட்டாத வெற்றி இல்லை
கொடாத கொடை இல்லை
கட்டாத கோவிலில்லை
இவர்க்கு நடுங்காத படையில்லை
இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை
முக்கடல் வற்றுவதுமில்லை
முத்தரையர் தோற்பதுமில்லை
நம்பினோர் கெட்டதில்லை
நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை
இவர்களிருந்தால் பல்லவனுக்கு பாதகமில்லை
பாண்டியனுக்கு குறையில்லை பலமில்லை
சேரனுக்குச் சேனையில்லை
தமிழுக்குத் தாழ்வில்லை
இவர்களின்றி சோழனுக்குச் சொந்தமில்லை
கொடும்பாளூர் கோட்டை இல்லை
களப்பிரர் காலமில்லை
புத்தனுக்கு மதமில்லை
சமணத்துக்குச் சமயமில்லை
வைணவத்துக்கு வாழ்வில்லை
சைவத்துக்குச் சரித்திரமில்லை
ஈசனுக்குக் கண்ணில்லை
குடைவரை கோவிலில்லை
கொள்ளிடக்கரை இல்லை
வைகைக்கு வளமில்லை
மஞ்சு விரட்டில்லை
மூவேந்தனுக்கு மகனும் இல்லை
இவர்களின்றி ஈராயிரமாண்டு தென்னிந்திய வரலாறே இல்லை
இன்றுவரை இவர்களால் மாறாத அரசும் இல்லை
இருந்தும் இவர்கள் கர்வம் கொண்டதில்லை
எவரையும் தாழ்த்தி நடத்தியதும் இல்லை
அப்படிப்பட்டவர்க்கு இவர் பிறக்கவும் இல்லை
(முத்து)ராஜா என்ற பெயர் எவர்க்கும் இல்லை
இவர்க்கு அடங்காத மாந்தரில்லை
விரிக்காத வலை இல்லை
பார்க்காத பாளையம் இல்லை
ஆடாத வேட்டை இல்லை
காக்காத காவல் இல்லை
சேர்வை எனும் இவர்க்கு நிகரான தலைவனில்லை
கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை
மூப்பரினும் மூத்தோரில்லை
தலையாரியினும் தலைசிறந்தோரில்லை
பூசாரியினும் புண்ணியரில்லை
நாயகரினும் கொற்றவனில்லை
முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை
அடக்காத காளை இல்லை
இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை
இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை
பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை
எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை
இவர்கள் பலம் இவர்களே அறிவதில்லை
மற்ற மக்கள் இவர்களிடம் எளிதாய் சண்டைக்கு வருவதில்லை
ஏனெனில் இவர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை என்பதை அவர்கள் அறியாமலில்லை
முத்தரையர் போல் மக்கள் வளம் யார்க்கும் இல்லை
இவர்கள் இல்லாத இடமில்லை
ஒன்று சேரப் போவதுமில்லை
சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை
தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை
முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை
முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை
எல்லோரிடமும் உணர்வும் இல்லை
நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை
அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை
முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை
அரசியலில் செல்வாக்கில்லை
பொருளாதார பலமில்லை
சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை
இனத்திற்குள் ஒற்றுமை இல்லை
பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை
மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை
ஊடகத்திலும் வலுவாய் இல்லை
முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...