முத்தரையர்களும் அரசியலும் (பாகம் இரண்டு)   


முத்தரையரின் இன்றைய நிலை



பழைய வரலாறுகளை புரட்டினால் அதில் அடிக்கடி அடிபடும் பெயரில் ஒன்று முத்தரையர்...






இன்றைக்கு இந்த சாதி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்...இந்த நோக்கத்தில் தான் கடந்த மூன்று மாதங்களாக நான் சில தகவல்களை திரட்டினேன்,


பின்புதான் தெரிந்தது இந்த சாதி எவ்வளவு இழிநிலையில் உள்ளது என்று...ஆம் இந்த சாதி தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ள சாதிகளில் ஒன்று என்பது எவ்வளவு உண்மையோ,அதே அளவு உண்மை        


தமிழகம் முழுவதும் உள்ள ஒரே சாதி இதுதான்...வன்னியரை எடுத்து கொள்ளுங்கள்,அவர்கள் சென்னையில் இருந்து வேதாரன்யதோடும்,பெரம்பலுரோடும் தெற்கில் முடிந்து போகின்றனர்...மேற்கில் தருமபுரியோடு சரி,கொங்கு வேளாளர் கொங்கு நாடு தவிர்த்து மற்ற இடங்களில் விரலை விட்டு எண்ணமுடியும்...ஆதிக்கம் கொண்ட கள்ளர் மதுரை,புதுகை,தஞ்சையின் சிலபகுதி,சிவகங்கை,ராம்நாத்,தேனி,போன்ற இடங்களில் மட்டும் சற்று பெரும்பான்மையாக வஉள்ளனர் அதாவது தமிழகத்தின் மத்திய பகுதியில் மட்டும் பரவி உள்ளனர்,


அகமுடயோர்,மறவர் நெல்லை,மதுரை,ராமநாதபுரததுடன்சரி...மொத்தம் ஆறு மாவட்டத்தில் மட்டுமே ஆதிக்கமும் பரவலும்...நாடார் விருதுநகரை சுற்றிமட்டும்,செட்டியார்,நாயிடு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் சிறுபான்மையினராக -மக்கள் தொகையில் மட்டும்-தமிழகத்தில் சிதறிக்க்கிடக்கின்றனர்...


ஆனால் மேலே சொன்ன முத்தரையர்களை இவர்களோடு ஒப்ப்பிடவே முடியாது மூன்றே வரியில் சொல்லி விடலாம் அதாவது இவர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியில் முழுவதும் பரவிவுள்ளனர்...இங்கிருந்து பிழைப்புகளுக்காக இவர்கள் சென்னை வுட்பட தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு சென்று மாற்று இனத்தவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ,அவர்களுக்கு கீழே அவர்கள் சொல்லுவதை அப்படியே செய்து மாத வூதியத்தில் அடிமை வாழ்க்கை வாழுகின்றனர்...


இவர்களது எண்ணிக்கையே சில சாதிகளின் எண்ணிக்கைக்கு சமமாக அந்த நகரங்களில் இருக்கின்றது என்றலும் அங்கு பூர்வ குடிகளாகவும் இந்த இனத்தவர் இருக்கின்றனர்...


குறிப்பாக சென்னையில் தெலுங்கு முத்தரையர்கள் லட்சக்கணக்கில் வுள்ளனர்...அண்மையில் அவர்களது சங்கத்தின் உதவியால் திரு. திருமேனி அவர்களின் மூலம் புள்ளிவிவரதோடு தெரிய வந்தது...



இதில் பெரும்பாலனோர் தாங்கள் எந்த சமூகத்தவர் என்பதை தெரியாமலேயே இருக்கின்றனர்...தெரிந்தவர்களும் காட்டிக்கொல்லாமல் இருக்கின்றனர்...மேலும் 29 பிரிவுடைய இந்த சாதியின் சில பிரிவுகளும் பூர்வகுடிகளாக இருக்கின்றனர்...எனவே இவர்களது எண்ணிக்கை பல லட்சம்(சென்னையில் மட்டும் ) ஆனால் அந்த எண்ணிகையை நான் குறிப்பிட விரும்பவில்லை.

   


    ஏனென்றல் நீங்கள் நம்ப மாட்டிர்கள்...கற்பனை என்று நினைப்பீர்,அதனால் உங்கள் பார்வைக்கு இந்த பதிவே கற்பனைக்கலைஞ்சியமாக தெரிந்து விடும் என்பதால் விட்டு விடுகின்றேன்...காலம் வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்.இது சென்னையில்,அடுத்தது வேலூர் பகுதி,இங்கு பணக்காரர்களாக,அரசியலில் பெரும்பான்மையாகவும் நாயக்கர் என்னும் பெயரில் நம்மவர்கள் குவிந்து கிடக்கின்றனர் ஆனால் அவர்களிடம் நீங்கள் முத்தரையர் என்று சொன்னால் அப்படியா!!! என்று ஆச்சர்ய படுகின்றனர்...அவ்வளவு விழிப்புணர்வு...





அடுத்து தருமபுரி,கிருஷ்ணகிரி பகுதி இங்கும் நம்மவர்கள் குறைந்தளவில் இருக்கின்றனர்.கோவை கவுண்டர் என்று சொல்லுவார்கள்...ஆனால் ஆச்சர்யம் என்னவென்றல் அங்கு அவர்களை விட வலையர் என்ற பெயரில் வாழும் முத்தரயர்கள்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது...இது தமிழகத்தின் வடக்கு பகுதியில்...






அடுத்து மதுரை பகுதி இங்கும் கள்ளர்களை விட பெரும்பான்மை நம்மவர்கள்தான்...மிகப்பெரிய வாக்கு வங்கியாகவும் அவர்களுக்கு உதவி வருகின்றோம்,இந்த பகுதியில் நத்தம் மேலூர் போன்ற தொகுதிகள் நம்மால் ஆளப்பட்டு இப்பொழுது மாற்றார்களுக்கு தாரைவார்க்கப் பட்டது.அன்று ஆண்ட நாம் இன்று இந்த தொகுதிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாதாம்...முற்றிலும் அவர்கள் கட்டுபாடு தானாம்...இருந்தாலும் உணர்வு கொண்ட இளையவர்கள் தேர்தல் நேரத்தில் போராடி சில ஆயிரம் ஓட்டுகளை நம்மவர்களை சுயேட்சையாக நிறுத்தி பெற்று சந்தோசப்படுகின்றனர்,,, பெரும்பாலும் வலையர் என்ற பெயரில் வாழுகின்றனர்.இதேநிலைதான்






ராம்நாடு மற்றும் சிவகங்கையிலும்...புதுகை தஞ்சையில் சில தொகுதியில் நம்மவர்கள் தான் எப்பொழுதும் ஆதிக்கம்,MLAபோன்ற பதவிகள் இதுவரை நம் வசம் இருந்தாலும் கடந்த தேர்தலில் வழக்கமான சூழ்சிகளால் தஞ்சையில் ஒரு தொகுதியை இழந்தோம்.ஆலங்குடி மட்டும் வழக்கம் போல ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் இவர்கள் அம்பலகாரர்,என்று பெரும்பான்மையாக வாழுகின்றனர்...





இவர்களது அரசியல் பலம்,பண பலம் அனைத்தும் முக்குலதொருக்கு நிகராக இருப்பதால் நேரடி மோதலில் ஈடுபட மாட்டார்,ஆனால் வலையர் அம்பலக்காரர் பிரிவு அதிகம் வுள்ள பகுதி தமிழகத்தில் இதுதான்...பெண் கொடுத்தல் எடுத்தல் கூட இவர்களுக்கு கிடையாது.ஒன்று படவே மாட்டார்கல்.தஞ்சையின் சில இடங்களில் இது போன்ற நிலைதான்.






அடுத்து திருச்சி,இதை கோட்டை என்று சொல்லிக்கொள்வார்கள். ஒரு சிறப்பம்சம்...இங்கு தொண்டர்களை விட தலைவர் எண்ணிக்கை அதிகம்...முன்பெல்லாம் மாற்று இனத்தவரோடுதன் சண்டை போடுவர் இப்போது இவர்களுக்குலே அடித்து கொள்வார்கள்...காரணம் தலைவர்கள்..


முத்தரையர் சமுதாயத்திலே படித்தவர்கள் அதிகம் உள்ள பகுதி இதுதான் ஆனால் ஒற்றுமை கிடையாது...முத்துராஜா என்று ஆணவத்தோடு சொல்லுமளவு இங்கு இவர்களது ஆதிக்கம் உள்ளது. மூன்று தொகுதிகள் கையில் உள்ளது ஒரு அமைச்சரும் உள்ளார்,சில பகுதிகள் மட்டுமே கள்ளர் வசம் உள்ளது மற்றவை முத்தரையர் கட்டுப்பாடே...மொத்தமாக திருச்சி தமிழகத்தின் இருதயம் மட்டுமல்ல முத்தரையர்களுக்கும்,தான்..இங்கு தலைவர்கள் மட்டும் ஒன்றுபட்டால் போதும் உயிரையும் தரும் இலட்சியபடை காத்து கிடக்கிறது ஆனால் இதை தலைவர்கள் உணர்ந்து சரியான பாதையில் பயன்படுத்துவார்கள என்று தெரியவில்லை.உணர்ந்தால் முத்துராஜாக்கள் ராஜா ஆவதை யாராலும் தடுக்க முடியாது..


இந்த தலைவர்கள் அடிதடிக்காக...அரசியல் செய்ய நினைப்பதை விடுத்து அரசியலுக்காக...அடிதடி செய்தால்...மற்றவர்களின் மூச்சு சத்தம் கூட கேட்காது...






தமிழகத்தின் தென்..பகுதிலும் ..இவர்கள் பல பெயர்களில் வாழுகின்றனர்...நாடார்,முக்குளதோர் போன்றவர்களுக்கு முன் ஏதும் செய்யா இயலாத வர்களாக இவர்கள் வஉள்ளனர்,சில இடங்களில் வலையர் என்று வாழுகின்றனர் ,முகநூல் போன்றவற்றின் மூலம் இவர்கள் வெளியில் வந்துகொண்டிருக்கின்றனர்...பெரியளவில் தகவல் கிடைக்கவில்லை...இருந்தாலும் துத்துக்குடி மீனவர்கள் அதிகம் நம்மவர்கள்தான்...அவர்களும் தங்களை முத்தரையர் என்று முகநூல் மூலம் அறிந்து கொண்டுவிட்டனர் திருச்சிவரை கார் எடுத்துவந்து சங்க நிகழ்வில் கலந்துகொள்ளும்மளவு வந்துவிட்டனர்..


.ஆந்திராவிலே தெலுங்கனவுக்காக போராடும் சந்திரபாபு பின்னல் நிற்பது தெலுங்கு முத்தரையர் என்றால் அணுவுலையை மூட சொல்லும் உதயகுமார் பின்பு நிற்பவர்கள் முழுவதும் முத்தரைய வலயர்களே...




அரசாண்ட வம்சம் இன்று குடிசைபோட்டு கூலி வேலை செய்துவாழுகின்றது....எல்லோரும் வளர்ச்சியை நோக்கி செல்ல இவர்களோ இருப்பதை இழந்துகொண்டு இருக்கின்றனர்...


இந்த நிலை மாறுவது எப்போது???? மாறுவதற்கு வாய்ப்பு வுண்டா?


பயணம் தொடரும்..... விடியலை நோக்கி உங்கள் திரு துரை ராஜ்குமார்


முத்தரையர் ( முத்துராஜா ) ஷெரிங் க்ரூப் சார்பாக...

                  HISTORY OF  CHOLA LINE OF MUTHARAIYAR 



Before Cholas the area round about Tanjavur was under the sway of a dynasty of chieftains known as the Muttaraiyar whose inscriptions are found at Sendalai and Niyamam, and who seem to have ruled either independently or as vassals of the Pallavas.   The Muttaraiyar believed to be ruled from 655AD to 860AD.  The city name " Thanjaur" seems to be derived from the name of a Mutharayar king "Thananjay" or "Dhananjaya".   


  Perumbidugu Muttaraiyan alias Kuvavan Maran (c. CE 655-c.680)    Ilangovadiyariyan alias Maran Paramesvaran (c A.D. 680-c.705)    Perumbidugu Muttaraiyan II alias Suvaran Maran (c. CE 705-c.745)    Videlvidugu Vilupperadi-Araisan alias Sattan Maran (c.A.C. 745-c.770)    Marppidugu alias Peradiaraiyan (c. CE 770-791)    Videlvidugu Muttaraiyan alias Kuvan Sattan (c. CE 791-c.826)    Sattan Paliyili (c. CE 826-c.851)

Tradition says that the muttaraiyar came from North. We find Renati cholas ruling the kadapa region around 600 AD(We have First full length Telugu Inscription). Renati cholas being feudatories of Pulakesi, could have got the kingdom in south during pulakesin raid in tamil nadu. We have Ayyavole 500 (Merchant Guild from Aihole ) using pudukottai  as one of their bases. So may be Muttaraiyar were installed in Tanjore by Pulakesi II. 


There is a kannada inscription in Kodumbalur.The rule of Muttaryaiyar was ended by Vijayalaya chola, who established the chola dynasty.  Vijayala Chola conquered Thanjavur from Elango Mutharayar who was the final ruler of Mutharaiyar dynasty. It is said that in the year A.D.852 Vijayalaya Chola waged war with the Muttaraiyar king Sattan Paliyilli (A.D.826-852) in the neighbouring east, and captured his territory of Thanjavur. While Vijayalaya Chola was supported by Pallava , the Muttaraiyan chief was supported by Pandya. Making use of the opportunity during a war between Pandyas and Pallavas, Vijayalaya having matrimonial relations with cheras captured Thanjavur.

 After being replaced by  cholas, muttaraiyar ruled as Chola vassals in the same region.Now where was vijayalaya from, how did vijayalaya got an army to defeat  a dynasty entrenched in the region.  The answer is,  he is from another branch from the same mutturaiyar family.  First temple work of Vijayalaya was rebuilding a mutturaiyar temple later known as vijaya cholewaram. Both Mutturaiyar and cholas worship Angamma (Ankalamma) devi.


 Family feud exploited by Pallavas and pandyas. The reason we don't see any swearing from each other. Thus the Chola line of Mutturaiyar comes into place.Chola decended from Muttaraiyar and Muttaraiyar decended from Telugu Chodas.  Dravidian scholars describe muttaraiyar as kalvar or kalabhra and dismiss them as uncivilized.

                           நாலடியாரில் முத்தரையரை பற்றி குறிப்புகள்:


கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி இயக்கத்தின் எழுச்சியால் பாண்டிய நாட்டில் சமண சமயம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள எண் பெருங்குன்றங்களிலும் மீண்டும் சமணம் உயிர்த்தெழுந்தது. அத்தகைய நிலையில்தான் நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் தோன்றிற்று. எண் பெருங்குன்றத்துச் சமண இருடியர்தாம் இப்பாடல்களை இயற்றினர் எனக் கருதப்படுகிறது.


 இந்நூலுள் இரு பாடல்களில் (பா. 200, 296) பாண்டியரின் கீழ்ச் சிற்றரசர்களாகப் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளை ஆண்ட பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். 

பா. 296இல், செல்வர்களிடம் சென்று பிச்சை ஏற்காமல் தன்மானத்துடனும் சுயமுயற்சியுடனும் வாழ்வோர்க்கு முன்மாதிரியாகப் பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர்.


 சிங்கம்புணரிப் பகுதியிலுள்ள மேலைச் சிவபுரி, மிதிலைப்பட்டியை உள்ளடக்கிய பூங்குன்ற நாட்டுத் தலைவனான பூங்குன்ற நாடன் பெயர் பா. 128, 212 ஆகியவற்றில் முன்னிலை விளித்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.


நாலடியாரை இயற்றிய சமண முனிவர்கள் இவ்விருவரின் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டனர் என எண்ணுவதற்கு இடமுண்டு.


இந்த இடத்தில், நாலடியாரில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு மிகுந்த முதன்மை பெறுகிறது. எந்தப் பெருமுத்தரையர் நாலடியாரின் போற்றுதலைப் பெற்றாரோ, அதே பெருமுத்தரையரால் மனமுவந்து அளிக்கப்பட்டு அவர்களின் ஈகைக் குணத்துக்கும் விருந்தோம்பல் பண்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த புலால் சோறு ஒரு பாடலில் (பா. 200) பழிக்கப்படுகிறது.


200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

பொருளுரை: ஈகையிற் சிறந்த பெருமுத்தரைய ரெண்னுஞ்ச சிறப்புப் பெயருடையார் சிறிதும் வெறுப்பின்றி ஈகின்ற பொரியலோடு கூடிய சோற்றை உண்பர் கீழ்மக்கள், அப் பொறிக் கரியைப் பெயரினாலும் அறியாதவராய் மிகுதியும் விரும்பிச் செய்கின்ற முயற்சியார் கிடைத்த சோற்றோடு கூடிய நீரும் அமுதம் போல அவருக்குச் சுவையுடையதாகவே இருக்கும்.

விளக்கவுரை: இச் செய்யுள் செய்த ஆசிரியர் காலத்துப் பெருஞ்ச செல்வத்தினராய் ஈகையிற் சிறந்த ஒருவர் இருந்தனராக வேண்டும்; அவருடைய கொடைச் சிறப்புப்பற்றி அவருக்குப் பெரு முத்தரையரஎனச் சிறப்புப் பெயர் வழங்கியப்போதும் இப்பெயர் முப்பதாம் அதிகாரத்தில் ஆறாவது செய்யுளில் கூறுதல் காண்க: சொற்குப் பொருள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய பெரிய மூன்று நிலங்களுக்கும் தலைவர் என்பது சோற்றோடு கூடிய நீரை மிகுதி பற்றி நீர் என்றனர். "நீருண்டார் நீரன்வாய்ப் புசுப" என்பதில் முதலில் உள்ள நீர் இப்பொருள் படல் காண்க.
English: The base ones feed on the rice combined with savoury dishes, given with a generons heard by the lords of the triple land (of Sera,Sola and Pandiya), Even water obtained by the persevering toil of those who do not know of savoury dishes even by name, will taste like nectar to them.


296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.


பொருளுரை: வளப்ப மிக்க பெரிய பூமியில் செல்வமுடையார் ரில்லேலாம் சிறந்த செல்வராயினும் அறத்தின் பொருட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவரே வறியவர், வறுமை யடைந்திருப்பினும் குறிப்பறிந்து தீயாத செல்வரிடத்துப் போய் இரக்குந்த் தன்மையில்லாதவரே பெருமுத்தரையோரோடு ஒத்த செல்வர்.

விளக்கவுரை:
பெருமுத்தரையரே என்னும் பிரிநிலை ஏகாரத்தைக் கொடாதவர், இரவாதவர் என்பவற்றோடு கூட்டுக. செல்வமுடைமையின் பயனெய் தாமைபற்றிக் கொடாதவரே வறிஞர் ரென்றும், மறுக்குன்ச் செல்வர் னென்று கூறினர் இரண்டனுருப்பை எழாவதக்குக....
                              வேங்கையின் மைந்தன் (புதினம்) கதையிலிருந்து 


“சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது":


திலகவதி வீரமல்லன்(MUTHARAIYAR KULA KATHAAPATHIRAM) அருகில் மிகவும் நெருங்கி வந்து அவன் காதோடு கூறினாள். “பாண்டியர்களுடைய மணிமுடி ரோகணத்தில்(ILANGAI THESAM) இருக்கிறதல்லவா? அதை எடுத்துக் கொண்டுவந்து, தமது புதல்வர்களில் ஒருவனைப் பாண்டிய நாட்டின் அரசனாக்கி, அவனுக்கு அதைச் சூட்டிவிடப் பார்க்கிறார். சக்கரவர்த்தியால்(RAJENDRA CHOLA-I) முடியை ரோகணத்திலிருந்து கொண்டுவரவும் முடியாது.

அப்படியே கொண்டு வந்தாலும், அது இவர்கள் எழுப்பும் புது மாளிகைக்குள் போய்ச் சேரவும் சேராது.”

“ஏன் சேராது? மாளிகையின் நுழைவாயிலுக்குள் போக முடியாத
அத்தனை பெரிய மணிமுடியா அது?”

“தலையிலே சூட்டிக்கொள்கிற முடி எங்கேயாவது அத்தனை பெரியதாக இருக்கமுடியுமா? ஏன் உங்கள் [MUTHARAIYAR], பரம்பரையில் யாருமே முடிசூடி நாடாண்டதில்லையோ?”

“நம்முடைய பரம்பரை என்று சொல். நானும் முத்தரையன்” என்றான் கொதிப்புடன் வீரமல்லன். “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது. சந்திரலேகையிலும், தஞ்சையிலும், இன்னும் எத்தனையோ இடங்களிலும் நாம் நாடாண்டவர்கள் தாமே!”

வீரமல்லனின் முகத்தில் திடீரென்று கோபச் சிவப் பேறியதைக் கண்டு துணுக்குற்றாள் திலகவதி.

“பொறுத்துக் கொள்ளுங்கள்! பெரிய மாளிகையைத் தரைமட்டமாக்கி
அதை மண்மேடாக்கப் போகிறார்கள் நம்மவர்கள். மணிமுடியும் நமக்குத்தான் கிடைக்கப் போகிறது. அந்தப் போரில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.”

வீரமல்லன் யோசனையில் ஆழ்ந்தான். நேரம் சென்றது.

“சரி. நான் மற்றொரு நாள் இதே கச்சைகளுடன் வருகிறேன். உன்
தந்தையாரிடம் நான் வந்ததைத் தெரிவிக்க வேண்டாம். இப்போதைக்கு
உனக்குப் பிடித்த ஒரு துணியைப் பொறுக்கி எடுத்துக்கொள். என்னுடைய அன்புக் காணிக்கையாக அது இருக்கட்டும்.”

மறுக்க மனமில்லாமல் ஒன்றை எடுத்துக்கொண்டாள் திலகவதி.
“மற்றொரு நாள் என்ன! நாளைக்கே வந்து சேருங்கள்; தந்தையார்
உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.”

மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்த வீரமல்லன் குதிரையின் குளம்பொலி கேட்டு அப்படியே திகைத்து நின்றான். “திலகவதி! நீ எடுத்துக்கொண்ட துணியை விரைந்து சென்று மறைத்து வை. உன் தந்தையார் வந்துவிட்டார்.”

பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை நாலுகால் பாய்ச்சலில் வீரமல்லனை நோக்கித் தாவி வந்தது. கையிலிருந்த மூட்டை நழுவி விழவே, அதைக் குனிந்து எடுக்கப் போனான் வீரமல்லன்.......
                                      முத்தரையர்கள் (சு.கி.பி. 650- சு.கி.பி. 860)

குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியவர்கள் முத்தரையர்கள்.


முத்தரையர்கள், களப்பிர குலத்தைச் சார்ந்தவர்களெனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டுத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அண்மையில் இப்போது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கும் செந்தலை என்பது முத்தரையர் ஆட்சியில் சந்திரலேகா என்ற அழகிய பெயரில் அவர்களுடைய தலைநகராகச் செயல்பட்டு வந்தது. பாண்டியரோடும் சோழரோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணைநின்று வெற்றிகாண உதவியுள்ளனர்.

முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும் குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என்பான் ஆவான். செந்தலைக் கல்வெட்டில் இவன் பெயர் காணப்படுகின்றது. இவன் கி.பி. 655-680 ஆண்டுகளில் வாழ்ந்திருந்தவன்; முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தவன். இவனையடுத்து இவன் மகன் இளங்கோவடியரையன் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி. 680-சு. 705) என்பவனும், அவனையடுத்து அவன் மகன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் என்கின்ற சுவரன் மாறன் (சு.கி.பி.705-சு. 745) என்பவனும் அரியணை ஏறினர். சுவரன்மாறன் இரண்டாம் பரமேசுவரன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன்; பிந்திய பல்லவ மன்னனுடன் நட்புப் பூண்டிருந்து அவனுக்குப் பெருந்துணையாக நடந்து கொண்டான். பாண்டியன் முதலாம் இராசசிம்மன் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கிப் பல இடங்களில் போர் தொடுத்து நெருக்கிக் கொண்டிருந்தபோது பல்லவ மன்னனின் படைத்தலைவனான புகழ்பெற்ற உதயசந்திரன் பல்லவனுக்குத் துணையாகப் போரில் நுழைந்து அவனைக் கடும் முற்றுகை ஒன்றினின்றும் விடுவித்ததுமன்றி மேலைச் சளுக்கரையும் தொண்டை மண்டலத்தை விட்டு விரட்டினான்.

இந்த நெருக்கடியில் சுவரன்மாறன் முத்தரையன் பல்லவனுக்கு ஆற்றிய பணி மிகப் பெரிதாகும். அவன் பாண்டியரையும் சேரரையும் கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாறி, வெங்கோடல், புகலி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டு வென்றான் என்று செந்தலைக் கல்வெட்டுக் கூறுகின்றது. வேள்விக்குடிச் செப்பேடுகள் இவற்றுள் கொடும்பாளூர்ப் போர் ஒன்றினையே குறிப்பிடுகின்றன; அதிலும் அப்போரில் பாண்டியனே வெற்றி கொண்டதாகவும் கூறுகின்றன. எனினும், போர் நடந்ததற்குச் சான்று ஒன்று உள்ளதால் முத்தரையன் ஏதேனும் ஒரு போரில் வெற்றி கண்டிருப்பான் என்பதில் ஐயமில்லை.சுவரன்மாறனுக்குச் சத்துருகேசரி, அபிமானதீரன், கள்வர்கள்வன், அதிசாகசன், ஸ்ரீதமராலயன், நெடுமாறன், வேள்மாறன் முதலிய விருதுப் பெயர்கள் உண்டு.

சுவரன்மாறனை அடுத்து விடேல் விடுகு விழுப்பேரடி அரசன் என்ற சாத்தன்மாறன் (சு.கி.பி. 745-சு.770) முடிசூட்டிக் கொண்டான். இவன் சுவரன்மாறனின் மகன் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் உள்ளன. பல்லவ மன்னரும் ‘விடேல் விடுகு’ என்ற விருதைத் தாங்கி வந்திருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இம் முத்தரையன் காலத்தில் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பெண்ணாகடத்தில் பல்லவரை முறியடித்துச் சோழர்மேல் பெரும் வெற்றியொன்றைக் கொண்டான். இப்போரில் முத்தரையர்கள் பங்கு கொண்டதும் கொள்ளாததும் விளங்கவில்லை.

அடுத்துப் பட்டத்துக்கு வந்தவன் மார்ப்பிடுகு பேரடியரையன் (சு.கி.பி.770-791) என்பான். இவன் விடேல்விடுகு விழுப்பேரடி முத்தரையனுடன் எவ்வகையான உறவு பூண்டவன் என்பது தெரியவில்லை. இவன் நந்திவர்ம பல்லவனின் உடன் காலத்தவன். இவன் ஆட்சியின்போது பாண்டியன் நெடுஞ்சடையன் இரண்டாம் முறையும் சோழ நாட்டின்மேல் படையெடுத்துவந்து ஆயிரவேலி, அயிரூர், புகழியூர் என்ற இடங்களில் கொங்கு மன்னன்மேல் வெற்றி கொண்டான். இப்போர்களில் கொங்கு மன்னனுக்குப் பல்லவரும், சேர மன்னரும் துணை நின்றனர். பல்லவர் தோல்வியுற்றுத் தம் காவிரிக்கரை நாடுகளை இழந்தனர். இப் போர்களில் இம்முத்தரைய மன்னன் கலந்துகொண்டதும், கொள்ளாததும் தெரியவில்லை. ஆலம்பாக்கத்தில் ‘மார்ப்பிடுகு ஏரி’யைக் கட்டினவனும், திருவெள்ளறையில் ‘மார்ப்பிடுகு பெருங்கிணறு’ தோண்டியவனும் இவனேயாவான்.

மார்ப்பிடுகு முத்தரையனையடுத்து விடேல்விடுகு முத்தரையன்
குவாவன்சாத்தன் (சு.கி.பி. 791-826) பட்டமேற்றான். இவன் பாண்டியனின் மேலாட்சிக்குட்பட்டிருந்தவன் என மாறன் சடையனின் செந்தலைக் கல்வெட்டினின்றும்13 ஊகிக்கலாம். பாண்டியர் நெடுநாள் காவிரிக்கரையில் ஆட்சி புரியவில்லை. அதைவிட்டு அவர்கள் விலகிய பிறகு முத்தரையர் முழு உரிமையுடன் அரசாளத் தொடங்கினர்.

விடேல்விடுகு முத்தரையன் குவாவன்சாத்தன் மகன் சாத்தன் பழியிலி என்பான் (சு. கி. பி. 826-851) தன் தந்தைக்குப் பிறகு அரசு கட்டில் ஏறினான். இவன் கற்றளி ஒன்று குடைவித்தான் என்று நார்த்தாமலைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. சாத்தன் பழியிலிக்குப் பெரும்பிடுகு, விடேல்விடுகு, மார்ப்பிடுகு போன்ற விருதுகள் அக் கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே, சாத்தன் பழியிலி பல்லவரின் மேலாட்சியினின்றும் விடுதலை வெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. இவனுடைய ஆட்சியில்தான் சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையை முத்தரையரின் பிடியினின்றும் விடுவித்துக் கொண்டான். பல்லவர்கள் அப்போது முத்தரையருக்குத் துணைநின்றதாகச் சான்றுகள் இல.

புதுக்கோட்டைப் பகுதியில் நிருபதுங்க பல்லவன் தன் ஆட்சியை விரிவுபடுத்தியபோது மீண்டும் வழக்கம்போல் முத்தரையர் பல்லவருக்குத்தாழ்ந்து வந்திருந்தனர். மெல்ல மெல்லச் சோழர் புதுக்கோட்டைப் பகுதியின்மேல் தம் செல்வாக்கைச் செலுத்தலானார்கள்; நார்த்தாமலையில் விசயாலய சோழீசுவரம் என்ற சிவன் கோயில் ஒன்றை எழுப்பினர். முதலாம் ஆதித்த சோழன் கொடும்பாளூர்க் குறுநில மன்னரிடம் பெண்கொண்டான். திருப்புறம்பயம் போருக்குப் பிறகு பாண்டியரின் செல்வாக்குக் குன்றிவந்தது. எனவே, முத்தரையர் சோழருடைய மேலாட்சிக்குத் தலைகுனியலானார்கள் என்று கொள்ளலாம். களப்பிரரைத் தொடர்ந்து முத்தரையர் சோழப் பேரரசு ஒன்று வளர்வதற்குப் பெருந் தடையாக இருந்து வந்தனர். அவ்வப்போது பல்லவர், சோழர், பாண்டியர் ஆகியவர்களுடன் மாறி மாறிக் கூட்டுறவு மேற்கொண்டதாலும், தனித்து நின்று தமக்கெனச் சுதந்தர உரிமைகள் தேடிக் கொள்ளாததாலும் முத்தரையரின் கை சாய்ந்துவந்தது. முத்தரையர் சோழரிடம் தோல்வியுற்றுத் தஞ்சையைக் கைவிட்டதும் பல்லவருக்கும் சோழருக்கும் இடையே இருந்த தடைகள் நீங்கின; சோழர்கள் பல்லவரின் மேல் நேருக்கு நேர் பகை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பும் ஏற்றங்கண்டது.

முத்தரையர் சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு உதவிவந்தனராயினும் சமண சமயத்துக்கும் பேராதரவு காட்டி வந்தனர். முத்தரையர் காலத்தில் இயற்றப்பட்ட நாலடியார் நூலில் காணப்படும் குறிப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் முத்தரையர் துணை புரிந்து வந்தனர். அவர்களுடைய அரசவையில் பல தமிழ்ப் புலவர்கள் அமர்ந்திருந்தனர். பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், பவடாயமங்கலம் அமருந்நிலை என்பார் அவர்களுள் சிலர். இப் புலவர்களின் பாடல்கள் செந்தலையில் உள்ள சுந்தரேசுவரர் கோயில் தூண்களின்மேல் செதுக்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் வெண்பா, கட்டளைக் கலித்துறைச் சீர்களில் இயற்றப்பட்டுள்ளன. அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலவிருத்தியில் (கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி) தமிழ் ‘முத்தரையர் கோவை’ என்னும் நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

முத்தரையர்கள் கோயில் கட்டுவதிலும், கற்றளிகள் குடைவதிலும் தம் நோக்கத்தைச் செலுத்திவந்தனர். சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன் பழியிலீசுவரம் குடைவித்தான். அவனுடைய மகள் அதற்கு முகமண்டபம், பலிபீடம், நந்தி இடபமண்டபம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தாள். திருமயம் தாலூக்காவில் பூவனைக்குடி என்ற இடத்தில் குடையப்பட்டுள்ள புஷ்பவனேசுரர் கோயில் பூதி களரி அமரூன்றி முத்தரையன் அமைத்ததாகும். தேவர்மலைக் கற்றளியும் முத்தரையர் செதுக்கியதே எனக் கருதுவர்.

மன்னரின் சதய விழா..புகைப்படங்கள்

நமது மன்னரை  பற்றி பெருமைபட பல வரலாற்று சான்றுகள் உள்ளது.. அவரை கும்பிட்டு வேண்டுவதைவிட....அவரை பார்த்து வீர வணக்கம் செய்து சபதம் எடுப்போம்.. நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் உன் மேல் ஆணையாக வென்று எடுப்போம் ......1000 ஆண்டுகளுக்கு முன்னால் உன்னால் இந்த தேசத்தை ஆள முடியும் போது எங்களால் முடியாத என்று வீர சபதம் எடுப்போம்.

மேலும் இந்த மாதம் முழுவதும் மன்னரின் புகழ் பாடும் மாதமாக எடுத்துக்கொண்டு....மாதம் முழுவதும் அணைத்து மாவட்ட ,வட்டார தலைநகர்களில் இது சம்பந்தமான நிகழ்சிகள் (நாடகம் .கலைநிகழ்ச்சி,பேச்சு போட்டி,விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டும்). நமது வேற்றுமைகளை மறந்து மன்னரின் பெயரால் அனைவரும் இணைந்து செய்யப்படவேண்டும்...

அவரது அதிகாரம், அவரது ஆட்சி காலத்தில் எப்படி தமிழ் மொழியும் பண்பாடும் மக்களும் சிறப்பாக எப்படி இருந்தார்கள்..என்ற பல வரலாற்று கட்டுரைகளை படைக்கவேண்டும்.

ஏன் அவர் புகழ் பாடவேண்டும் என்ற நம் மக்களுக்கு புரியவைக்கவேண்டும்...அதன் மூலம் நம் மக்களுக்கு நம்பிக்கையை ம்( நாம் ஆண்ட சமுகம் தான் நம்மாலும் சிறப்பாக மற்ற சமுகத்தை வழிநடத்தமுடியும் என்ற நம்பிக்கையை) உண்டாக்கவேண்டும.

மேலும் இந்த விழா நம்மின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவும்.மற்ற சமூகத்தினர் நம்மை பற்றி அறிந்துகொள்ள என்பதை நினிவில் கொண்டு .. மற்ற இனத்தவர்களுக்கு இடையுறு இல்லாமல் நடந்துகொள்வோம்.......http://www.facebook.com/groups/mutharaiyar/














முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை

வணக்கம் உறவுகளே ...கடந்த 19.01.2013 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது இந்த சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பை தந்த அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறை அதிகாரிகள் , கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் : 

தீர்மானங்கள் :

1. பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊருக்கு ஒருவரைஅடையாளம் காண்பது அவர்கள் மூலம் ஒரு குழு அமைத்து (குறைந்தது 5 முதல் 10 பேர் வரை),அவர்கள் மூலம் அந்த அந்த ஊர்களில் உள்ள முத்தரையர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர் பட்டியல்கொண்டு சேகரிப்பது. அதில் அவர்களின் குடும்பத்தில் பட்டதாரிகள் இருக்கிறார்களா ? தற்பொழுது யாரேனும் படித்துக் கொண்டு இருக்கிறார்களா ? இதுவரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் எதேனும் பலன்கள் பெற்று இருக்கிறார்களா ? அரசு வேலையில் யாரேனும் இருக்கிறார்களா ? என்பது போன்ற தகவல்களை திரட்டுவது பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து தொடர்ந்து பராமரிப்பது, இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்க்குமான தேவைகள் என்ன ? அதனைப் பெரும் வழிகள் என்ன? தொடர்ந்து அவர்களை தொடர்பில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று உறவினைப் பேணுவது, இந்த தகவல்களின் அடிப்படையில் அரசியல் ரீதியிலான பலன்களை நம் இன அரசியல்வாதிகள் பெறவும், அவர்கள் மூலமாக நமக்கான தேவைகளைப் பெறவும் வழிவகைகளை ஆராய்வது.

2. முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்குள் புரிந்துணர்விற்காகவும், குழுவாக செயல்படுவதினால்ஏற்படும் நன்மையினை பகிரும் வண்ணம் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுழற்கோப்பை சமுதாயகபாடி மற்றும் கைப்பந்து போட்டி" முத்தரையர்கள் பெரும்பாண்மையாக (அ) முத்தரையர்கள் மட்டும்வாழக் கூடிய கிராமங்களில் ஆண்டுதோறும் சுழற்ச்சிமுறையில் நடத்துவது, இதில் திறமையாகவிளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு வழுவான அணிஅமைத்து மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்க்க செய்வது.


3. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது, படிக்கும்மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைப் பற்றிய சரியான வழிகாட்டுவது, வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, பல்வேறு இடங்களில் பணிபுரியும் (உள் நாடு / வெளி நாடு) நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்கள் மூலம் வேலைப் பெற முயர்சிப்பது, அரசு வேலைகள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவித்து, அதற்க்கான போட்டித் தேர்விற்க்கு உரிய பயிற்சிக்களை தர முயர்சிப்பது, 

4. “அம்பலக்காரர் உறவின் முறை சங்கம்” ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்து மக்களின் எண்ணிக்கைமற்றும் பங்காளி வகையறாக்களின் எண்ணிக்கைக்கு எற்ப ஒன்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்கள் அமைத்து,அனைத்து குடும்பத்தினையும் இணைக்க வேண்டும், ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்க்குபெண் கொடுக்கவோ / எடுக்கவோ செய்யும் போது குடும்பத்தினைப் பற்றி அரிய/ மற்றும் இனக்கலப்பினை தடுக்க முடியும்

5. கதை / கவிதை எழுதும் திறனுள்ளவர்களுக்காக ஆண்டு தோறும் " இலக்கிய விழா" நடத்துவது,அதன் மூலம் அவர்கள் திறன் வெளி உலகிற்க்கு செல்ல நம்மால் ஆன உதவியினை செய்வது.


6. இலவச சட்ட உதவிக்கான ஏற்பாடுகள், பல்வேறு சூழ் நிலைகளால் வரும் வழக்குகளை எப்படி கையால்வது, யாரை அணுகுவது, இனத்திற்க்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்க்கென இனப் பெரியவர்கள் அடங்கிய குழு அமைத்து ஒருசார்பு இல்லாமல் நடு நிலையான தீர்வினை பெற உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல்

7. இலவச மருத்துவ உதவிகள், எந்த நோய்க்கு என்ன சிகிச்சை ? எங்கே பெற வேண்டும் ? இலவசமாக பெற வாய்ப்பு உண்டா ? யாருடைய சிபாரிசும் தேவையா ? தேவை என்றால் எப்படி பெறுவது ?

8. சிறு பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து சமுதாய செய்திகளை அளித்தல், கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சடித்தோ சமுதாய செய்திகளை எல்லோரும் அறியும் வண்ணம் மாதம் ஒருமுறை வெளியிடுவதற்க்கான வாய்ப்புகள், எந்த மாதிரியான செய்திகள் எல்லொரும் அறிந்திருக்க வேண்டும் ? சமூக விழிப்புணர்வினையும், சுகாதார, கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்கும் வாய்ப்புகள்

9. நவீன வேளாண் தகவல்களை பெற்று தருதல், தொடர்ந்து தண்ணிர் பிரச்சனை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துவரும் நம் இனத்தவருக்கான மாற்று விவசாய முறைகள், குறுகிய கால பணப் பயிர்கள், அதிக லாபம் தரக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், மற்றும் பலன்கள் நமது இனத்திற்க்கு தொடர்ந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? எப்படி தகவல்களை பகிர்ந்துக் கொள்வது ? தகவல்களை பெறுவது ?

10. முத்தரையர் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் // சுயத்தொழில் வாய்ப்புகளை எற்படுத்திக்கொடுத்தல் பெரும்பாலும் இருக்கின்ற அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் எந்த தனிப் பட்ட தொழிலிலும் ஈடுபடுவது இல்லை, அதனை மாற்றி அவர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டியும் / உதவிகளைப் பெற்றும் தரும் பட்சத்தில் தனிபட்ட ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியில் பலம் பெற முடியும் அதற்க்கான நீண்டகால செயல்திட்டம் வடிவமைத்து நமது சமூகப் குடும்ப பெண்களின் விரையம் ஆகும் நேரத்தினை பயன் உள்ள வகையில் பயன்படுத்துவது, சிறிய கைத்தொழில்கள் / மூலதனம் அதிகம் தேவைப் படாத பாதுகாப்பான தொழில்கள், குழுவாக செய்யக் கூடிய வேலைகளை குறித்த தகவல்களை திரட்டி அளித்தல்

11. கந்துவட்டிக் கொடுமையிலிருந்து நம் மக்களை காக்கும் முகமாக முத்தரையர் கூட்டுறவு சங்கம்அமைப்பதற்க்கான சாத்தியக் கூறுகள், இதன் மூலம் நகைக் கடன், விவசாய கடன், உள்ளிட்ட சிறியகடன்களை குறைவான வட்டி விகிதத்தில் வழங்கும் வாய்ப்புகள், ஆதாரத் தொகை திரட்டும் வகையில்இனத்தவர்கள் எல்லொருடைய பங்களிக்கும் விதமாக பங்குகளை வெளியிடும் வாய்ப்புகள் குறித்தஆய்வுகள்

வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..

வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..

பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழிபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்கேழற் பன்றி வீழ, அயலதுஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;பதலை ஒருகண் பையென இயக்குமின்;மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அதுதன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமைஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!
புறநானூறு 152 வல்வில் ஓரி

வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான்.முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடித்து மானை உருண்டுவிழச் செய்த்து. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம். முழவை முழக்குங்கள். யாழை மீட்டுங்கள். தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள். எல்லரி தட்டுங்கள். ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள். பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள். மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள். இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
புலவர் புகழுரை
இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.
சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான். இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'