முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை

வணக்கம் உறவுகளே ...கடந்த 19.01.2013 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது இந்த சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பை தந்த அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறை அதிகாரிகள் , கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் : 

தீர்மானங்கள் :

1. பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊருக்கு ஒருவரைஅடையாளம் காண்பது அவர்கள் மூலம் ஒரு குழு அமைத்து (குறைந்தது 5 முதல் 10 பேர் வரை),அவர்கள் மூலம் அந்த அந்த ஊர்களில் உள்ள முத்தரையர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர் பட்டியல்கொண்டு சேகரிப்பது. அதில் அவர்களின் குடும்பத்தில் பட்டதாரிகள் இருக்கிறார்களா ? தற்பொழுது யாரேனும் படித்துக் கொண்டு இருக்கிறார்களா ? இதுவரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் எதேனும் பலன்கள் பெற்று இருக்கிறார்களா ? அரசு வேலையில் யாரேனும் இருக்கிறார்களா ? என்பது போன்ற தகவல்களை திரட்டுவது பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து தொடர்ந்து பராமரிப்பது, இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்க்குமான தேவைகள் என்ன ? அதனைப் பெரும் வழிகள் என்ன? தொடர்ந்து அவர்களை தொடர்பில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று உறவினைப் பேணுவது, இந்த தகவல்களின் அடிப்படையில் அரசியல் ரீதியிலான பலன்களை நம் இன அரசியல்வாதிகள் பெறவும், அவர்கள் மூலமாக நமக்கான தேவைகளைப் பெறவும் வழிவகைகளை ஆராய்வது.

2. முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்குள் புரிந்துணர்விற்காகவும், குழுவாக செயல்படுவதினால்ஏற்படும் நன்மையினை பகிரும் வண்ணம் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுழற்கோப்பை சமுதாயகபாடி மற்றும் கைப்பந்து போட்டி" முத்தரையர்கள் பெரும்பாண்மையாக (அ) முத்தரையர்கள் மட்டும்வாழக் கூடிய கிராமங்களில் ஆண்டுதோறும் சுழற்ச்சிமுறையில் நடத்துவது, இதில் திறமையாகவிளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு வழுவான அணிஅமைத்து மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்க்க செய்வது.


3. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது, படிக்கும்மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைப் பற்றிய சரியான வழிகாட்டுவது, வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, பல்வேறு இடங்களில் பணிபுரியும் (உள் நாடு / வெளி நாடு) நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்கள் மூலம் வேலைப் பெற முயர்சிப்பது, அரசு வேலைகள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவித்து, அதற்க்கான போட்டித் தேர்விற்க்கு உரிய பயிற்சிக்களை தர முயர்சிப்பது, 

4. “அம்பலக்காரர் உறவின் முறை சங்கம்” ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்து மக்களின் எண்ணிக்கைமற்றும் பங்காளி வகையறாக்களின் எண்ணிக்கைக்கு எற்ப ஒன்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்கள் அமைத்து,அனைத்து குடும்பத்தினையும் இணைக்க வேண்டும், ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்க்குபெண் கொடுக்கவோ / எடுக்கவோ செய்யும் போது குடும்பத்தினைப் பற்றி அரிய/ மற்றும் இனக்கலப்பினை தடுக்க முடியும்

5. கதை / கவிதை எழுதும் திறனுள்ளவர்களுக்காக ஆண்டு தோறும் " இலக்கிய விழா" நடத்துவது,அதன் மூலம் அவர்கள் திறன் வெளி உலகிற்க்கு செல்ல நம்மால் ஆன உதவியினை செய்வது.


6. இலவச சட்ட உதவிக்கான ஏற்பாடுகள், பல்வேறு சூழ் நிலைகளால் வரும் வழக்குகளை எப்படி கையால்வது, யாரை அணுகுவது, இனத்திற்க்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்க்கென இனப் பெரியவர்கள் அடங்கிய குழு அமைத்து ஒருசார்பு இல்லாமல் நடு நிலையான தீர்வினை பெற உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல்

7. இலவச மருத்துவ உதவிகள், எந்த நோய்க்கு என்ன சிகிச்சை ? எங்கே பெற வேண்டும் ? இலவசமாக பெற வாய்ப்பு உண்டா ? யாருடைய சிபாரிசும் தேவையா ? தேவை என்றால் எப்படி பெறுவது ?

8. சிறு பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து சமுதாய செய்திகளை அளித்தல், கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சடித்தோ சமுதாய செய்திகளை எல்லோரும் அறியும் வண்ணம் மாதம் ஒருமுறை வெளியிடுவதற்க்கான வாய்ப்புகள், எந்த மாதிரியான செய்திகள் எல்லொரும் அறிந்திருக்க வேண்டும் ? சமூக விழிப்புணர்வினையும், சுகாதார, கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்கும் வாய்ப்புகள்

9. நவீன வேளாண் தகவல்களை பெற்று தருதல், தொடர்ந்து தண்ணிர் பிரச்சனை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துவரும் நம் இனத்தவருக்கான மாற்று விவசாய முறைகள், குறுகிய கால பணப் பயிர்கள், அதிக லாபம் தரக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், மற்றும் பலன்கள் நமது இனத்திற்க்கு தொடர்ந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? எப்படி தகவல்களை பகிர்ந்துக் கொள்வது ? தகவல்களை பெறுவது ?

10. முத்தரையர் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் // சுயத்தொழில் வாய்ப்புகளை எற்படுத்திக்கொடுத்தல் பெரும்பாலும் இருக்கின்ற அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் எந்த தனிப் பட்ட தொழிலிலும் ஈடுபடுவது இல்லை, அதனை மாற்றி அவர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டியும் / உதவிகளைப் பெற்றும் தரும் பட்சத்தில் தனிபட்ட ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியில் பலம் பெற முடியும் அதற்க்கான நீண்டகால செயல்திட்டம் வடிவமைத்து நமது சமூகப் குடும்ப பெண்களின் விரையம் ஆகும் நேரத்தினை பயன் உள்ள வகையில் பயன்படுத்துவது, சிறிய கைத்தொழில்கள் / மூலதனம் அதிகம் தேவைப் படாத பாதுகாப்பான தொழில்கள், குழுவாக செய்யக் கூடிய வேலைகளை குறித்த தகவல்களை திரட்டி அளித்தல்

11. கந்துவட்டிக் கொடுமையிலிருந்து நம் மக்களை காக்கும் முகமாக முத்தரையர் கூட்டுறவு சங்கம்அமைப்பதற்க்கான சாத்தியக் கூறுகள், இதன் மூலம் நகைக் கடன், விவசாய கடன், உள்ளிட்ட சிறியகடன்களை குறைவான வட்டி விகிதத்தில் வழங்கும் வாய்ப்புகள், ஆதாரத் தொகை திரட்டும் வகையில்இனத்தவர்கள் எல்லொருடைய பங்களிக்கும் விதமாக பங்குகளை வெளியிடும் வாய்ப்புகள் குறித்தஆய்வுகள்

வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..

வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..

பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழிபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்கேழற் பன்றி வீழ, அயலதுஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;பதலை ஒருகண் பையென இயக்குமின்;மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அதுதன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமைஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!
புறநானூறு 152 வல்வில் ஓரி

வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான்.முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடித்து மானை உருண்டுவிழச் செய்த்து. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம். முழவை முழக்குங்கள். யாழை மீட்டுங்கள். தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள். எல்லரி தட்டுங்கள். ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள். பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள். மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள். இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
புலவர் புகழுரை
இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.
சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான். இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'