திரு M . R . கோவேந்தன் அவர்களின் 12 ஆண்டு நினைவு அஞ்சலி

http://www.facebook.com/groups/mutharaiyar/
வணக்கம் ..
காலங்கள் பல கடந்தாலும் முத்தரையர் இன மக்களின் என்றும் நீங்கா இடம் பிடித்த , முத்தரையர் இனத்தின் முக்கிய தலைவரும் , முன்னாள் அமைச்சரும் ஆன
திரு M . R . கோவேந்தன் அவர்களின் 12 ஆண்டு நினைவு அஞ்சலி ...

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் முடசிக்காடு
திரு . M . R . கோவேந்தன் அவர்கள் , 1977 , 1980 1984 , மூன்று முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் .முத்தரையர் இனத்திற்கும் அமைச்சரவை இல் உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி 1984 ஆண்டு முதல் முதலாக முத்தரையர் இனத்தின் அமைச்சர் பதவி
... வகித்தவர் M .R . கோவேந்தன் .
நம் இன மக்கள் கல்வி , வேலை வாய்ப்பில் முன்னேற, முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்த பட்டோர் ( MBC ) பட்டியலில் சேர்க்க கொள்கையாக
நின்று ,, புதுக்கோட்டை முத்தரையர் பொது கூடத்தில் புரட்சி தலைவர் MGR அவர்களால் கொள்கை வேந்தன் என்ற பாராடை பெற்றவர் ..

அன்னாரின் இன் முகம் காண ஆவல் , இன்னொரு முறை பூமிக்கு இறங்கிவா தலைவா ...என்ற வேண்டுதலோடு
முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்களும் அஞ்சலி செலுத்துவோம் ..

M .R . கோவேந்தன் அவர்களின் நினைவாக தான் , நமது நண்பரின் தாத்தா , நண்பருக்கு கோவிந்தராஜ் என்ற பெயரை சூடினார்கள் என்பதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்
..   Rajkumar..
June 13 at 6:48am./http://www.facebook.com/groups/mutharaiyar/

கவிதைகள்...மாறன். பேட்டை

http://www.facebook.com/groups/mutharaiyar/
               அவளே என் தோழி  

ஓலை வீடென்று
உன் வீட்டார்
உதறி விட்டுப் போனபின்பும்
அவரைத்தான் மணப்பேன்னு
அடம்பிடித்து
என் கைப்பிடித்தவளே...

அனைத்து நகைகளும்
அடகுக்குப் போனபோதும்
அன்பே போதுமென்றாய் !
எத்தனையோ துயரங்கள்
என்னைத் தீண்டியபோதும்
அன்புத் தூளியிட்டு
தாலாட்டிய தாய் நீ....

நீ வந்த நேரம்
நான் உயர்ந்தேன்னு ஊரார் சொன்னபோது
உழைப்பால் உயர்ந்தோமென்று
ஊருக்கும் உணர்த்தினாயே....

உனக்கென்று எதுவும் வேண்டுமென்று
இன்றுவரைக் கேட்ட்தில்லை
எனக்கொரு நோய் வந்தால்
மெனக்கெட்டு மருந்து செய்து
மருத்துவராய் மாறிப்போவாய்...

முத்தான மூன்று செல்வங்களை
சொத்தாக பெற்றுத் தந்த
கருவறையை புற்றுநோய் தீண்டியபோதும்
கலங்கவில்லையம்மா நீ....!
சிறுமயக்கம் ஏற்பட்டு
சரிந்து நான் விழுந்தது
அறிந்து துவண்டு போனாயே...

மணமுடித்த நாள்முதலாய் தோழியாய்
மனைவியாய் மனசுக்குள் நிறைந்தவளே
எப்பிறவி எடுத்தாலும்
உன்னுடனே நானிருப்பேன்...

.மாறன். பேட்டை 

அம்மா ....
கை
ஆயிரம் கைகள்
அள்ளி அனைத்தாலும்

அம்மா உன்
அனபுக் கைக்கு ஈடாகுமா ...!

கைவீசக் கற்றுத் தந்து
கைகாட்டி அப்பாவை
அடையாளம்
காட்டியதும் நீதானே ...

வெளிநாடு செல்ல நான்
விரும்பிய போது உன் தங்க
அட்டிகையை
அடமானம் வைத்து வழி
அனுப்பியதும் நீதானே ....

வாழ்கையில் நானுயர
தன்னம்பிக்கை
தந்த தாயே
கைமாறு ஏது செய்யின்
ஈடாகுமா உனக்கு ...
மாறன். பேட்டை 

நாகரிக {முகபக்க}தாய் 
நேரமில்லை"
அம்மா என்றழைத்து

ஆசையோடு ஓடிவரும்
குழந்தை அதை தூக்கி
உச்சி முகந்து
முத்தம் கொடுக்க வேண்டிய
தாய் பணிப்பெண்ணை
பணிக்கிறாள்
பாலகனை தூக்கசொல்லி...

தொடக்க நிலை பயிலும்
மகனுக்கு
பாடம் சொல்லி கொடுக்க
நேரமில்லை!
வாரம் ஒருமுறை
முக ஒப்பனைக்கு மட்டும்
மூன்று மணி நேரம் ...!
முதியோர் இல்லத்தில்
முன்டிக்கிடக்கும்
பெற்றோரைக்கான
அழைக்கிறான் கணவன் ....!
எனக்கு நேரமில்லை
என்று சொல்லியவள்
கணினி முன் அமர்ந்து
முகநூளில்
மூல்கிபோகிறாள்
நேரமில்லாமல் ....!